Sunday, October 5, 2014

மரத்திலான கைவினைப் பொருட்கள் ஏற்றுமதிக்கு அத்தாட்சி

மரத்திலான கைவினைப் பொருட்கள் ஏற்றுமதிக்கு அத்தாட்சி


கைவினைப் பொருட்கள் இந்தியாவிலிருந்து வருடத்திற்கு
17970 கோடி ரூபாய் மதிப்பிற்கு செய்யப்படுகிறதுஇதில் 2750 கோடி ரூபாய் அளவிற்கு மரத்திலான கைவினைப் பொருட்கள் செய்யப்படுகின்றனஅனுமதி இல்லாமல் மரங்கள் வெட்டுவது தடை செய்யப்பட்டுள்ளதுஅப்படி அனுமதி இல்லாமல் வெட்டப்பட்ட மரங்களில் இருந்து செய்யப்படும் மரத்திலான கைவினைப் பொருட்களை வாங்குவதற்கு பல நாடுகளில் தடை இருக்கிறது.இதை தவிர்க்க இந்தியா “விரிக்ஷ்” என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவில் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் அனுமதியுடன் வெட்டப்பட்ட மரங்களிலிருந்து தான் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தகுந்த அத்தாட்சிகள் பெற்று அதற்கான விரிக்ஷ் என்ற சான்றிதழை வழங்கவுள்ளதுஇது பல நாடுகளில் நமது மரத்திலான கைவினைப் பொருட்கள் விற்பதற்கு உதவும்.

No comments:

Post a Comment